Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

பீகாரில் பலத்த இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி -தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!!

பீகாரில் பலத்த இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி -தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனத்த மழை காரணமாக ஏற்பட்ட இடி மின்னலால் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புர்னியா, அராரியா பகுதியில் 8 பேரும், சோபால் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் ஆகிய 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்துள்ளனர் என்று அம்மாநில முதல் மந்திரி அலுவலகம் கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல் இம்மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

பீகாரின் முதல் மந்திரி நிதிஷ்குமார் அவர்கள், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் . மேலும், மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment