Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்ட பிரபல நடிகர்

நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்ட பிரபல நடிகர்

 

நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள பிரபல தமிழ் நடிகர் ஒருவர் பெண் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

அந்த வகையில் 90 களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இவர் வலம் வந்தார். அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் அவருக்கே ஜோடியாகவும் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான பல்வேறு திரைப்படங்களிலும் நடித்ததன் மூலமாக அங்கும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

 

இந்நிலையில் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர்களின் மகள் நைனிகா விஜய்க்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.

 

இதனைத்தொடர்ந்து கணவரின் மறைவால் துயரத்தில் இருந்த மீனா, தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்.

 

இதனிடையே நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என்பது குறித்த செய்திகள் வதந்திகளாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

 

இந்த நிலையில் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்வதற்காக அவரை பிரபல நடிகர் சரத்குமார் பெண் கேட்டுள்ளதாகவும், இதற்கு அவருடைய அம்மா மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இதனால் தான் சம்மந்தம் கைவிடப்பட்டதாகவும் இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Comment