Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

அண்ணா என்ன விட்டுங்க கெஞ்சிய மாணவி! காதலன் முன்னே ஆபாச படமெடுத்து கற்பழித்த கொடூரம்

அண்ணா என்ன விட்டுங்க கெஞ்சிய மாணவி! காதலன் முன்னே கற்பழித்த கொடூரம்

கோவையில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ படமெடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

கோவையில் உள்ள ஒரு பூங்காவில் கடந்த 26 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் அவருடைய காதலனுடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்தது.

இதனையடுத்து பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் இருந்த அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பூங்காவின் அருகிலுள்ள மறைவான இடத்தில் வைத்து தாக்கியுள்ளனர். காதலன் கண்முன்னே மாணவியை மிரட்டி, அவரது ஆடைகளை கழற்றி, அதை ஆபாச வீடியோவாக பதிவு செய்து செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளனர். 

ஆனால், காமவெறி பிடித்த அந்த வாலிபர்களோ காதலன் கண்முன்னே அந்த மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் பயந்து போன அந்த மாணவி அன்று இரவு காதலன் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் மாலை வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவங்களை அழுது கொண்டே அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இது தொடர்பாக அனைத்து மகளிர் மேற்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 6 பேர் தான் அந்த மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொலை மிரட்டல், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின்கீழ் இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராகுல்(21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28), நாராயணமூர்த்தி(30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.  இதில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உட்பட இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். மாணவியின் பிறந்த நாளன்று நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment