Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்

பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்

 

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி திவ்யா திரையரங்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன், கூலி தொழிலாளியான இவர் நேற்று சேலம் டவுன் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தனது இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்டி வந்துள்ளார் .

 

இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது வண்டியில் எரிபொருள் காலியாகிவிட்டது, இதனால் தனது இருசக்கர வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தி வாகனத்தை பல முறை இயக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் வாகனம் இயங்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அதிகப்படியான மது போதையில் என்ன செய்வது என்று கூட தெரியாமல் தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தி உள்ளார்.

 

சாலையின் நடுவே கொழுந்துவிட்டு எரிந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் சேலம் செவ்வாய்பேட்டை போலிசார் அங்கு செல்வதற்குள் மணிகண்டனின் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகியது.

 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலிசார் சம்பவத்திற்கு காரணமான மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேலம் கருங்கல்பட்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் கடும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Leave a Comment