Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ – பிரகாஷ்ராஜ் பதிலடி!

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ – பிரகாஷ்ராஜ் பதிலடி!

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ என்று நெட்டிசன்களுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

நாளை சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்க உள்ளது. இந்த அற்புத காட்சியை நேரடியாக ஒளிபரப்பில் காண உலக மக்களே ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்கிவிட்டால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா சாதனைப் படைத்து நான்காவது இடத்தைப் பிடிக்கும். உலகமே சந்திராயன் 3 வெற்றியை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் டுவிட்டரில் சந்திரயான் – 3 ஐ விமர்சித்து போட்ட பதிவு நெட்டிசன்கள் இடையே விமர்சனங்களை பெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடிகர் பிரகாஷ் ராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒருவர் டீ போடுவதாக கேலிச்சித்திரம் ஒன்றை பதிவிட்டு, கேப்ஷனாக வாவ்… விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இருந்து வரும் முதல் படம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகவே, இதைப் பார்த்த நெட்டிசன்கள் “நீங்கள் வேறொரு அரசியலை சார்ந்தவராக இருக்கலாம். அதற்காக அறிவியல் விஞ்ஞானிகளை வெறுப்பது, அவர்களின் பணியை கேலி செய்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் என் பதிவில் ஆம்ஸ்ட்ராங் காலத்தின் நகைச்சுவையை குறிப்பிட்டுள்ளேன். நான் நமது கேரளா சாய்வாலாவை (தேநீர் கடைக்காரர்களை) கொண்டாடுகிறேன். உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்னை. வளருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment