Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவில் வரும் முக்கிய மாற்றங்கள்?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவில் வரும் முக்கிய மாற்றங்கள்?

இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த முடிவு செய்த மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது அடுத்து வரும் 21 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து நாட்டு மக்களுக்காக இது குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதிப்பை உணர்ந்து ஊரடங்கு உத்தரவை வருகின்ற மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளார். குறிப்பாக நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த மாத இறுதி வரை ஏற்கனவே விதித்திருந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிதுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டும், பொது மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் நாடு முழுக்க உள்ள மாவட்டங்கள் அனைத்தையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள், ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள், பசுமை மண்டல மாவட்டங்கள் என மூன்று பிரிவுகளாக நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் வகைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகள், ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் என்ற பிரிவின் கீழ் வருவதாக கூறப்படுகிறது.

அதே போல கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தும் அது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடிய பகுதிகளை ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள் என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுவதாகவும், சுத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் அனைத்தும் பசுமை மண்டலங்கள் என்ற பிரிவின் கீழ் வரும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சரவை செயலாளர் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பி மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதில் கிடைக்கப் பெற்ற விவரங்களை கொண்டு நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை இவ்வாறு 3 பிரிவுகளாக தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என்றும், மேலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கு வசதியாக நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் எவையெல்லாம் பிரச்சனை இல்லாத இடங்கள் என்று வகைப்படுத்தும் பணிகளை அரசு தற்போது தொடங்கிவிட்டது என்பதை தான் இன்று சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அளித்த பேட்டி உறுதிப்படுத்தி உள்ளது.

Leave a Comment