Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

கொத்தும் பாம்பை பார்த்திருப்பீர்கள்! கத்தும் பாம்பை பார்த்திருக்கிறீர்களா?

கொத்தும் பாம்பை பார்த்திருப்பீர்கள்! கத்தும் பாம்பை பார்த்திருக்கிறீர்களா?

பெரும்பாலான மக்களுக்கு பாம்பு என்றாலே பத்து அடி தள்ளி நிற்பார்கள்.அது தங்களை கொத்துமோ இல்லையோ ஆனால் அதை பார்த்தாலே பலருக்கு மனதில் அச்சம் ஏற்பட்டு அங்கிருந்து ஓடி விடுவார்கள்.

ஆனால் அதே நேரத்தில் இந்த அச்சமளிக்கும் பாம்புகளை சர்வ சாதரணமாக பிடித்து விளையாட்டு காட்டுபவர்களையும் பார்த்துள்ளோம்.சரி இருவிதமான மக்கள் இருப்பது போல பாம்பிலும் விசித்திரமான ஒரு வகை தெரியவந்துள்ளது.

அதாவது எல்லா பாம்புகளும் கொத்தும் என்பதை அனைவரும் அறிவோம் ஆனால் நாம் இங்கு பார்க்க போகும் பாம்பு கொத்துவதற்கு பதிலாக கத்தியுள்ளது. என்னடா பாம்பு கத்துது என சொல்றாங்கனு நினைக்க வேண்டாம்.உண்மையாகவே நடந்த சம்பவமே இது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ராஜ நாகம் ஒன்று வித்தியாசமாக கத்திய போது அதன் குரலை பதிவு செய்தவர்கள் சமூகவலைதளத்தில் பரவவிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் பாம்பு இரையை விழுங்கியது போல காணப்படுகிறது.இரையை விழுங்கிய நிலையில் காணப்படும் அந்தப் பாம்பு எழுப்பும் ஒலி வித்தியாசமாக இருந்துள்ளது.

குறிப்பாக குழந்தை கத்துவது போல உள்ள பாம்பின் அந்த குரலை கேட்டவர்களுக்கு விசித்தரமாக இருந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஆச்சரியமிக்க இந்த வீடியோவை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.

Leave a Comment