Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!!

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் இனிமேல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் நிபுணர்கள் கூறி வந்தனர். மேலும், இந்த மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

இந்த வகையில், தற்போது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண அதிகரிப்பு ஜூலை ஒன்றாம் தேதியான இன்று முதல் தொடங்கப்படுகிறது.

இந்த மின்கட்டண உயர்வானது ஒரு யூனிட்-க்கு 13 காசுகள் முதல் 21 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம் என்றும் இது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே என்றும் தமிழக அரசு கூறி உள்ளது.

அதாவது, வீடுகள் மற்றும் வேளாண் குடிசை இணைப்புகளுக்கு ஏற்கனவே இருந்தபடி நூறு யூனிட் இலவசமாக வழங்கப்பட்ட மின்சாரம் அப்படியே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கைத்தறி மற்றும் விசைத்தறி போன்றவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமானது எந்தவித மாற்றமும் இன்றி அவ்வாறே செயல்படும் என்றும் தமிழக அரசு கூறி உள்ளது.

இவ்வாறு மின்கட்டணம் உயர்ந்தால் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதாக நிறுவனத்தாரர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு அதை ரத்து செய்ய கோரிக்கையை எழுப்பியும் வருகின்றனர்.

Leave a Comment