Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

ஆபாச படம் பார்ப்பாரா? கேப்மாரி பட நடிகை அளித்த சுவாரசிய பதில்

ஆபாச படம் பார்ப்பாரா? கேப்மாரி பட நடிகை அளித்த சுவாரசிய பதில்

ஆபாச படம் பார்ப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு கேப்மாரி படத்தின் கதாநாயகியான அதுல்யா ரவி சுவாரசியமான பதிலை அளித்து அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய “காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் இந்த அதுல்யா ரவி. கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்த தமிழ் பொண்ணான இவருக்கு சமூக வளைத்தளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் இப்படி கிடைத்த வரவேற்பு மூலம் இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்தது தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைத்தது. மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் `நாடோடிகள் 2′ தற்போது `அடுத்த சாட்டை’ என தொடர்ந்து வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து , தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் அடுத்ததாக ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதுல்யா ரவி இதில் முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளையும் தெரிவித்து வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஜெய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கேப்மாரி’ படத்திலும் நடித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய், வைபவி, சித்தார்த் விபின், சத்யன்,சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இவருக்கும் ஜெய்க்கும் இருந்த முத்த காட்சிகளில் பல முறை ரீ டேக் கூட வாங்கியதாக கூறியிருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைப்பது குறித்து சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை அதுல்யா, தற்போது உள்ள காலகட்டத்தில் லிவ்விங் ரிலேஷன்ஸ் இருக்கும் தலைமுறையில் பலருக்கு ஏற்றவாறு இது மாறுபடும். ஆனால், என்னை பொறுத்த வரை திருமணத்திற்கு பிறகு தான் உடல் உறவு என்றும் கூறியுள்ளார். மேலும், ஆபாச படம் பார்ப்பீர்களா என்று அடுத்த சர்ச்சையான கேள்வியை கேட்டதற்கு உண்மையாக நான் அந்த படத்தினை பார்த்ததில்லை. எப்பவாவது இன்ஸ்டா, டுவிட்டரில் ஏதாவது காட்சி வரும்போது பார்ப்பது மட்டும் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment