Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிராக வலம் வந்தவர் மாரிமுத்து.50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு பரியேறும் பெருமாள்,ஜெயிலர் படங்கள் நல்ல பெயர் பெற்று தந்தது.இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.இவர் நடிப்பதைத் தாண்டி பாடல் ஆசிரியர்,இயக்குநர் என்று பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார்.பிரபல தொலைக்காட்சியில் ‘எதிர்நீச்சல்’ என்ற தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார்.அந்த சீரியலில் அவர் கூறும் ‘ஏய் இந்தம்மா’ என்ற வசனம் மக்கள் மத்தியில் மிகவும் பேமன்ஸ் ஆனது.

இந்நிலையில் இன்று காலையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசுவதற்காக டப்பிங் தியேட்டருக்கு மாரிமுத்து சென்றிருக்கிறார்.அவருடன் கமலேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் இருந்துள்ளார்.மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரெனே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கிருந்தவர்கள் வடபழனியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரிமுத்துவின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த செய்தி அறிந்து ‘எதிர்நீச்சல்’ தொடரின் நடிகர்,நடிகைகள் மற்றும் சினிமா,டிவி நட்சத்திரங்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.பேட்டிகள்,ரியாலிட்டி ஷோக்களில் வெளிப்படையாகப் பேசும் அவரின் குணத்தை அனைவரும் விரும்பினர். இந்நிலையில் 56 வயதாகும் மாரிமுத்து திடீர் நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்துள்ள செய்தி ஒட்டு மொத்த திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

Leave a Comment