Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

மகளையே வன்புணர்வு செய்த தந்தை! பாய்ந்தது போக்சோ

தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவரான முருகன் என்பவர் 16 வயதிலுள்ள தன்னுடைய சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 47 வயதாகும் முருகன் 16 வயதாகும் தன்னுடைய சொந்த மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது  சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்தது குறித்து முருகன் தன்னுடைய நண்பரான தங்கமுருகன் (23) என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கொடுமையை அறிந்த அந்த பெண்ணின் தாய், இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பின், காவல் ஆய்வாளர் வனிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பெண்ணின் தந்தையான முருகனை கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார் இதன் பின்னர் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தலைமறைவாக இருக்கும் தங்க முருகனையும் காவல்துறையினர் தேடி வருகி்ன்றனர்.

Leave a Comment