50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன?
இப்போதுள்ள நடிகைகள் பலர் திருமண வயதை தாண்டியும் இன்னமும் திருமணம் செய்யாமல் ஹீரோயினாக நடித்துக் கொண்டுள்ளனர். காரணம் மார்கெட் இருக்கும் வரைதான் சம்பாதிக்க முடியும். ஒரு சிலர் காதல் தோல்வி போன்ற காரணங்களால் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால் 80s மற்றும் 90s காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஹீரோயின்களில் சிலர் இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள் அவர்களை பற்றியும், ஏன் இன்னுமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
சித்தாரா
![50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன? 2](https://www.livetamilnews.com/wp-content/uploads/2023/06/images-84-300x169.jpeg)
இவருக்கு தற்போது 50 வயதாகிறது. இவர் மறைந்த இயக்குனர் K.பாலச்சந்தர் அவர்களால் புது புது அர்த்தங்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கார்த்திக், ரகுமான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் படையப்பா படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்திருக்கிறார். இவருக்கு ஒரு காதல் இருந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததால் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல், அவரது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.
மும்தாஜ்
![50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன? 3](https://www.livetamilnews.com/wp-content/uploads/2023/06/images-85-300x169.jpeg)
இவர் 1999ம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா படத்தில் T.ராஜேந்தர் அவர்களால் ஹீரோயினாக அறிமுகமானார். மும்தாஜ் ஹீரோயினாக பெரிய அளவில் பேச படவில்லை என்றாலும்
திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது 42 வயதாகும் மும்தாஜிற்கு உடலில் சில பிரச்சினைகள் இருப்பதால், அதன் காரணமாக திருமணம் செய்யாமல் அவருடைய தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா
![50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன? 4](https://www.livetamilnews.com/wp-content/uploads/2023/06/Screenshot_2023-06-02-11-20-46-985_commiui_gallery-edit-300x188.jpg)
இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். பிறகு மறைந்த நடிகர் முரளிக்கு ஜோடியாக காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். இந்த திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பிரியமுடன், நேருக்கு நேர்,சொல்லாமலே, வானத்தை போல போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். இவருக்கு ஆன்மீகத்தில் அதிக அளவு ஈடுபாடு உள்ளதால் தான் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
தபு
![50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன? 5](https://www.livetamilnews.com/wp-content/uploads/2023/06/images-88-300x225.jpeg)
இவர் பாலிவுட் நடிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சியமானவர். தபு காதல் தேசம் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,சிநேகிதியே போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். சிநேகிதியே திரைப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகர் ஒருவரை கதலித்ததாகவும், அந்த காதல் கை கூடாததால் 51 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என கூறப்படுகிறது.
நக்மா
![50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன? 6](https://www.livetamilnews.com/wp-content/uploads/2023/06/images-89-300x175.jpeg)
காதலன் படத்தில் ஹீரோயினாக இயக்குனர் ஷங்கர் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டார். இவர் ரஜினியுடன் பாட்சா, கார்த்திக்குடன் பிஸ்தா, சரத்குமாருடன் ரகசிய போலீஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். நக்மா சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் சரத்குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் கங்குலி ஆகியோருடன் காதலில் இருந்ததாக சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அவருடைய கேரியரில் சரிவு உண்டானது. பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார். முழு நேர அரசியலில் இருப்பதால் 50 வயதை எட்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
கோவை சரளா
![50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன? 7](https://www.livetamilnews.com/wp-content/uploads/2023/06/images-86-300x199.jpeg)
இவர் தற்போது வரையிலும் காமெடியில் கலக்கி கொண்டிருப்பவர். காமெடி மட்டுமல்லாமல் குணசித்திர நடிப்பிற்கும் பெயர் போனவர். இவரது சிறப்பு இவருடைய கோவை தமிழ்தான். இந்த கோவை தமிழ் மூலம்தான் சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அவருக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை எனவும், தன் வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே வாழ்க்கையின் குறிக்கோள் எனவும் கூறியுள்ளார். அவருக்கு தற்போது 61 வயது ஆனாலும் இன்னமும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஷோபனா
![50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன? 8](https://www.livetamilnews.com/wp-content/uploads/2023/06/IMG_20230602_111654-300x174.jpg)
இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், மலையாளத்தில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கமலுடன் எனக்குள் ஒருவன், ரஜினியுடன் சிவா, தளபதி, போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 53 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்யாமல் உள்ளார். சில வருடங்களுக்கு முன்னால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.