Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை : என்ன காரணம்?

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை : என்ன காரணம்?

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி அவர்களின் மகள் லாரா. வயது 17. இச்சிறுமி, சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லாரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தூங்கச் சென்ற லாரா, விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தையான விஜய் ஆண்டனி அவர்களின் படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்த வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி லாரா, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களும் அவரது மனைவியும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாரா தற்கொலை செய்து கொண்டதற்கு, காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விஜய் ஆண்டனி அவர்களின் வீட்டின் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிரபல பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து திரை பிரபலங்களின் வாரிசுகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் தொடர்ந்து வருகிறது.

இக்கால கட்டத்தில் உள்ள இளம் தலைமுறையினர் குறிப்பாகப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சிறு பிரச்சனை என்றாலும் உடனே தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இந்த முடிவை இளைய தலைமுறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழ்வில் நிறையப் பிரச்சனைகள் வரும் அதனைச் சமாளிக்கும் அளவிற்கு நாம் மன வலிமையுடன் வாழ வேண்டும் அதைவிடுத்து தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது என அவர்கள் தன்னம்பிக்கை கூறியுள்ளனர்.

Leave a Comment