Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

தக்காளி கிலோ ரூ.140… விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

தக்காளி கிலோ ரூ.140… விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

தற்பொழுது தக்காளியின் விலையை கேட்டால் தான் தலை சுற்றும் படி உள்ளது.அந்த அளவிற்கு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.

சென்னை, தக்காளி வரத்து குறைந்ததால்,கோயம்பேடு சந்தையில் இதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது என கூறப்படுகிறது. நேற்று ஒரு கிலோ ரூ.110 க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி வரத்து குறைவால் இன்று ரூ.140 என்று விற்பனையாகி வருகிறது. நேற்றைக்காட்டிலும் இன்று ரூ.30 உயர்ந்து உள்ளது.

மேலும் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது. தற்பொழுது 1,100 டன் தக்காளி தேவைப்படும் சூழலில் வெறும் 400 டன் வரத்து மட்டுமே வந்துள்ளது.இதன் காரணமாக விலை அதிகரித்து காணப்படுகிறது என்று மொத்த விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதேபோல்,இஞ்சி,பட்டாணி போன்ற மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தினந்தோறும் காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி கலந்த கலக்கத்தில் உள்ளனர்.

Leave a Comment